ரேஷன் விநியோக முறைகேடு வழக்கில் வங்காள நடிகைக்கு அமலாக்கத் துறை சம்மன்

By KU BUREAU

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ரேஷன் விநியோக திட்டத்தில் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு வரும் ஜூன் 5-ம் தேதி ஆஜராகும்படி வங்காள நடிகை ரிதுபர்ணா சென்குப்தாவுக்கு அமலாக்கத் துறை நேற்று சம்மன் அனுப்பியது. கடந்த 2019-ம் ஆண்டில், ரோஸ் வேலி பொன்சி ஊழல் தொடர்பாக நடிகை ரிதுபர்ணா சென்குப்தாவை அமலாக்கத் துறை விசாரித்தது. ரோஸ் வேலி குழுமத் தலைவர் கவுதம் குண்டுவுடன் ரிதுபர்ணா சென்குப்தா பல வெளிநாடுகளுக்கு பயணம் சென்றதாகவும், திரைப்படங்களின் விற்பனை மற்றும் தயாரிப்பில் அவருக்கு உதவியதாகவும் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE