சீரியலுக்கு மட்டும் ஏன் டப்பிங் பேசுவதில்லை?- யதார்த்தம் பேசும் கிரித்திகா!

By காமதேனு

‘‘இப்போதெல்லாம், ‘பூவே பூச்சூடவா’ மீனாட்சின்னுதான் எல்லாருமே என்னைக் கூப்பிடுறாங்க. போற போக்கைப் பார்த்தால் நானே என் நிஜப் பெயரை மறந்துருவேன் போலிருக்கு!’’ இப்படிச் சொல்லிவிட்டு தன்னை மறந்து சிரிக்கிறார் கிரித்திகா. சன் டிவியில் ‘சந்திரலேகா’, ஜீ தமிழில் ‘பூவே பூச்சூடவா’ என அம்மணி படு பிஸி. சீரியல் ஷூட்டிங்கில் சின்னதாய் கிடைத்த ஒரு (விளம்பர!) இடைவேளையில் அவரிடம் பேசியதிலிருந்து…

‘பூவே பூச்சூடவா’ தொடருக்கு செம ரெஸ்பான்ஸ் போல?

மீனாட்சி கதாபாத்திரத்துக்கு நீங்கதான் சரியா இருப்பீங்கன்னு என்னைக் கேட்டப்ப, நான் இன்னொரு புராஜெக்ட் சம்பந்தமா சின்னதா ஒரு மன குழப்பத்துல இருந்தேன். ஆனா, பூவே பூச்சூடவா டீம் தொடர்ந்து என்னைய மதிச்சு அழைப்பு விடுத்துக்கிட்டே இருந்தாங்க. இவ்ளோ அன்பு காட்டுறாங்களேன்னுதான் இந்தத் தொடருக்குள்ள வந்தேன். தொடர் இப்ப டாப் கியர்ல போயிட்டிருக்கு! ஒருவேளை இந்த வாய்ப்பை மிஸ் பண்ணியிருந்தா, ‘வலிய வந்த தேவியை விரட்டிவிட்ட துரதிருஷ்டக்காரி நான்’ன்னு இந்நேரம் சொல்லிட்டிருந்திருப்பேன். இந்த வாய்ப்பை என்னிடம் துரத்தித் துரத்தித் திணித்ததற்காக தயாரிப்பாளர்கள் நாராயணன் - அப்துல்லா, சேனல் ஹெட் உள்ளிட்ட குழுவினருக்கு நன்றி.

 ரொமான்ஸ், வில்லி, நாயகி என எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் உங்களை இலகுவாக பொறுத்திக் கொள்கிறீர்களே?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE