மாதவனுடன் நடிப்பதை பாதுகாப்பாக உணர்கிறேன்: ‘மாறா’ ஷ்ரத்தா ஸ்ரீநாத் பேட்டி

By காமதேனு

காஷ்மீர் பனியையும், கன்னடத்து வெயிலையும் கலந்து செய்த கலவை ஷ்ரத்தா ஸ்ரீநாத். காஷ்மீரில் பிறந்த இந்தக் காவியத் தென்றல் கர்நாடகாவைச் சேர்ந்த ராணுவ அதிகாரியின் மகள். இந்தத் தென்றல், தந்தையுடன் இந்தியா முழுக்க டிரான்ஸ்ஃபர் ஆகி, தற்போது தென்னிந்தியத் திரைத்துறை பக்கம் வீசிக்கொண்டிருக்கிறது. கன்னடத்தில் ‘யு-டர்ன்’, தமிழில் ‘விக்ரம் வேதா’ மூலம் கவனம் ஈர்த்தவர், மறுபடியும் மாதவனுடன் ‘மாறா’வில் ஜோடி சேர்ந்திருக்கிறார். அவருடன் பேசியதிலிருந்து...

மீண்டும் மாதவனோடு நடித்து வருவது குறித்து..?

ரொம்ப சந்தோஷமான விஷயம். அவர் எப்படி நடிப்பார் என்பது எனக்குத் தெரியும். அவருடன் நடிப்பதை நான்  பாதுகாப்பாக உணர்கிறேன். அத்தகைய பாதுகாப்பு இருப்பதாக நாம் உணர்ந்தால்தான் ஸ்கிரீனில் மேஜிக்கை உருவாக்க முடியும் என்று நம்புகிறவள் நான். அத்தகைய மேஜிக்தான் ‘விக்ரம் வேதா’விலும் நிகழ்ந்தது, மீண்டும் அது ‘மாறா’வில் தொடர்ந்தது. முதல்முறையாக இந்தியில், ‘மிலன் டாக்கீஸ்’ படத்தில் நடிக்கிறேன். ‘விக்ரம் வேதா’ தான் அந்த வாய்ப்பை எனக்குப் பெற்றுத்தந்தது.

மேடை நாடகங்களிலிருந்து சினிமாவுக்கு வந்தது பற்றி..?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE