எனக்கும் விஜய் சேதுபதிக்கும் ஒரு கெமிஸ்ட்ரி இருக்கு...- ‘ஜுங்கா’ விஜயா பாட்டி ஜூட் பேட்டி!

By காமதேனு

“யாருப்பா அந்தக் கிழவி... இந்தப் போடு போடுது?” என்று ஜுங்கா படம் பார்த்த இளைஞர்களைக் கேட்க வைத்தவர் விஜயா பாட்டி. நாடக நடிகையாக இருந்து, 1958-ல் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ வாயிலாக சினிமாவில் நுழைந்தவர், 60 ஆண்டுகளுக்குப் பிறகு புகழின் உச்சியை எட்டியிருக்கிறார். காமதேனுவுக்காக பாட்டியை பேட்டி கண்டேன்.

 எப்படி இருக்கீங்க பாட்டி?!

எனக்கென்னடா செல்லம், நல்லாயிருக்கேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, இங்கிலீஷ், ஒரியான்னு 6 மொழியில நடிச்சிட்டேன். கொமரியில இருந்து கிழவி வரைக்கும் எல்லா வேஷமும் கட்டிட்டேன். அந்தப் படத்தை தியேட்டர்ல போய் பார்த்திருக்கேன். ஆனா, என்னைய சுத்தி நின்று கூட்டம் கூட்டமாக சின்னப் பசங்க போட்டோ எடுத்த அனுபவம் ஜுங்காலதான் கிடைச்சுது. இயக்குநர் கோகுலை மட்டும் என்னால மறக்கவே முடியாது. அவன் தங்கம்பா. அவன் மட்டுமில்ல, நடிகர் விஜய் சேதுபதி, கேமராமேன் எல்லாம் என்னைய ஒரு குழந்தை மாதிரி கவனிச்சிக்கிட்டாங்க. 

விஜய் சேதுபதி பற்றி...

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE