ரஜினி பாதி... ரஜினி பாதி... கலந்து செய்த கலவை நான்!- கஜினிகாந்த் ஆர்யா கலகல பேட்டி

By காமதேனு

சின்னத்திரையில் பெண் தேடிக்கொண்டிருந்த ‘மாப்பிள்ளை’ ஆர்யா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மெகா திரைக்கு வந்திருக்கிறார். தெலுங்குப் படமான ‘பலே பலே மஹாதேவின்’ தமிழ் ரீமேக்கான ‘கஜினிகாந்த்’, ஆர்யா நடித்து வெளியாகவுள்ள சூழலில் அவர் காமதேனுவுக்கு அளித்த பேட்டி.

‘கஜினிகாந்த்’. படத்தின் பெயரே வித்தியாசமாக இருக்கிறதே?

ஞாபக மறதி என்றவுடன், அனைவருக்கும் ‘கஜினி’ படம்தான் ஞாபகத்துக்கு வரும். அதோடு ‘தர்மத்தின் தலைவன்’ படத்தில் ரஜினி சாரும் இதே போன்றதொரு கேரக்டர்தான் பண்ணியிருப்பார். இந்த இரண்டையும் சேர்த்து ‘கஜினிகாந்த்’ என்று பெயரிட்டோம். தெலுங்கில் வெற்றிபெற்ற படம் என்றவுடன், அதைத் தமிழில் சரியாகப் பண்ணுவதற்குப் பொருத்தமான இயக்குநருக்காகக் காத்திருந்தோம். ஞானவேல்ராஜா சாரிடம் ரீமேக் உரிமையிருந்தாலும், இயக்குநர் அமையாமலே இருந்தது. சந்தோஷின் முதல் 2 படங்களில் காமெடி செமயாக இருந்ததால், அவரே இயக்குநராகிவிட்டார். இதில் சதீஷ் - கருணாகரன் ஆகியோருடன் நான் அடித்திருக்கும் லூட்டியை மக்கள் ரசிப்பார்கள். படத்தின் காட்சியமைப்புகளே காமெடியாக இருப்பதால், மெனக்கெட்டு வசனங்களைப் போட்டுக் காமெடியை உருவாக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை.

‘ஹர ஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படங்களை இயக்கிய சந்தோஷ் இதிலும் ஏதாவது ஏடாகூடம் பண்ணியிருக்காரா..?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE