காலையில் சம்மதம்... மாலையில் மறுப்பு..!- ரஜினியின் மனதை மாற்றியது யார்?- கேட்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன்

By காமதேனு

தனது படைப்புகளால் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்ற இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். ஒரு இயக்குநரைச் சுற்றி இத்தனை சர்ச்சைகளா என்றும் வியக்க வைத்துக்கொண்டிருக்கிறார். இதற்கும், அவரது படங்கள் எப்போது வெளிவரும் என்ற ரசிகர்களின் கேள்விகளுக்கும் விடைதேடி அவரது மயிலாப்பூர் வீட்டுக்குச் சென்றேன். அந்தப் பிரம்மாண்ட வீட்டில் தனியாக இருந்தார் கௌதம் வாசுதேவ் மேனன். காலிங் பெல் அழுத்தினேன். “வாங்க ப்ரோ... எப்படி இருக்கீங்க. மீட் பண்ணி ரொம்ப நாளாச்சு. வீட்ல எல்லாரும் ‘கோலி சோடா 2’ படத்துக்குப் போயிட்டாங்க” என்று பேசிக் கொண்டே மாடிக்கு அழைத்துச் சென்றார். க்ரீன் டீயை உறிஞ்சிய படியே, அவரைப் பற்றிய சர்ச்சைகள் அனைத்தையும் கேள்விகளாகக் கேட்டேன். சிலவற்றுக்கு யோசித்துப் பேசினார்,

சிலவற்றுக்கு ரொம்ப கூலாகப் பதில் சொன்னார். இனி அந்த உரையாடல்...

கோலி சோடா2’ல ரொம்ப இயல்பா நடிச்சிருந்தீங்க, வாழ்த்துகள். கையில் நிறைய படங்கள் இருந்தாலும் எது முதலில் வெளிவரப்போகிறது?

தீபாவளிக்கு ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ வும், அதற்கு அடுத்த மாதத்தில் ‘துருவ நட்சத்திரமும்’ வெளிவரும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE