``அரசியல் பேசினா, ஆர்.ஜேவுக்கு ஆபத்து!”-சனோவின் ஆதங்கம்

By காமதேனு

‘‘இன்னைக்கு அரசியல்ங்கிற பேர்ல நடந்துக்கிட்டிருக்கிற  ஒவ்வொரு பிரச்சினை பத்தியும் ஒரு ஆர்.ஜேயா மனம்விட்டு மக்கள்கிட்ட பகிர்ந்துக்கணும்னு ஆசை. ஆனா, அதுக்கெல்லாம்  அனுமதி இல்லைன்னு நினைக்கும்போது வருத்தமா இருக்கு’’ என்கிறார் சனோ.

 சென்னை ஃபீவர் 91.9 எஃப்.எம் சேனலில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒலிபரப்பாகும் ‘லூஸ் கன்ட்ரோல்’ நிகழ்ச்சியின் ஆர்.ஜே. சனோ.

‘‘அரசியல், மதம் சார்ந்த எந்த விஷயத்தையும் ரேடியோ சேனல்கள் விவாதிக்க முடியாது. அது அடிப்படையான ரூல்ஸ். அதனாலதான் பாட்டுங்க, விளையாட்டு, சினிமான்னு பொழுதுபோக்கு விஷயங்களுக்குள்ளயே டிராவல் ஆகிட்டிருக்கோம். அப்படி மறைமுகமா ஏதாவது சொல்ல நினைத்தாலும் லைசென்ஸ் போய்டும். அதையெல்லாம் உடைச்சுட்டு  சவுக்கடி கொடுக்குற மாதிரி இங்கே நடக்கிற விஷயங்களை மனசுவிட்டு சொல்லணும்னு தோணுது. அது முடியாதுங்கிறபோது வருத்தமாத்தான் இருக்கு’’ என்று ஆதங்கத்தில் பொங்குகிறார் சனோ.

``ஆங்கிலக் கலப்புடன் நிகழ்ச்சிகளை வழங்குறீங்களே?’’ என்று கேட்டால்,

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE