மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ ஆக.29, 2024

By KU BUREAU

பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஆக.29, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: நம்பிக்கைக்கு உரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

ரிஷபம்: குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு சென்று வருவீர்கள். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும்.

மிதுனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக செலவு ஏற்படும்.

கடகம்: மறைமுக எதிர்ப்பு விலகும். உங்களின் செயல் அனைவரும் வியக்கும்படி இருக்கும். குடும்பத்தில் நிம்மதி தங்கும்.

சிம்மம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும்.

கன்னி: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

துலாம்: உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடக்கவும். வியாபாரத்தில் போட்டியை சமாளிப்பீர்.

விருச்சிகம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல் உண்டு.

தனுசு: தெளிவு பிறக்கும். சகோதர சகோதரிகளால் ஆதாயம் உண்டு. தாயாரின் உடல்நலம் நிம்மதி தரும்.

மகரம்: உங்களின் அணுகுமுறையை மாற்றி தடைபட்ட வேலையை முடிப்பீர்கள். சகோதரியின் விசேஷத்துக்கு அதிகம் உழைப்பீர்.

கும்பம்: மற்றவர்களின் ரசனைக்கேற்ப செயல்படுவீர். உறவினர்கள் உங்களை பெருமையாக பார்ப்பர்

மீனம்: தெளிவாக பேசி சில வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE