News In Pics: ஆந்திர கனமழையால் புதுவையின் ஏனாமில் வெள்ள எச்சரிக்கை


1 / 16
ஆந்திராவில் கனமழை தொடர்ந்து வரும் சூழலில் கோதாவரியில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதால் புதுச்சேரி பிராந்தியமான ஏனாமில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. | படங்கள்: ஞானபிரகாஷ்
2 / 16
புதுவையின் ஏனாம் பிராந்தியம் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கோதாவரி ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் உள்ளது. ஆந்திர பகுதியில் தொடர் கன மழை தொடர்ந்து பெய்து வருவதால் கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.
3 / 16
ஆந்திர பத்ராச்சலம் அணையின் நீர்மட்டம் 36 அடியாக உயர்ந்துள்ளது. இந்த அணை 43 அடியை எட்டும் போது முதல் எச்சரிக்கை விடப்படும்.
4 / 16
இருப்பினும் ஏனாம் பிராந்திய மண்டல நிர்வாகி முனுசாமி உத்தரவின் பேரில் அனைத்து துறையினரும் பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
5 / 16
தாழ்வான பகுதிகளான பிரான்சிபா, பாலயோகி நகர், பழைய ராஜீவ் நகர், குருசம்பேட்டை, குரு கிருஷ்ணாபுரம் மற்றும் கடலோர கிராமங்களில் வெள்ள நீர் அளவை கணக்கிட்டு வருகின்றனர். கனமழை நீடித்தால் ஏனாமில் வெள்ள நீர் புகும் அபாயம் உள்ளது.
6 / 16
இதுகுறித்து ஏனாம் மண்டல நிர்வாகி முனுசாமி கூறியதாவது: “கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக மக்கள் பெருமளவில் பாதிக்கப்படவில்லை.
7 / 16
அதேபோல் இந்த ஆண்டும் அனைத்து துறைகளும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. போதிய அளவிலான மணல் மூட்டைகளை பொதுப்பணித்துறை தயார் நிலையில் வைத்துள்ளது.
8 / 16
தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு சென்று உணவு வழங்க குடிமைபொருள் வழங்கல் துறையும், வருவாய் துறையும் தயார் நிலையில் உள்ளன.
9 / 16
மழைக்கால நோயிலிருந்து மக்களை பாதுகாக்க சுகாதார துறையும், மரங்கள் விழுந்து, மழையில் சிக்கினாலும் பாதிக்கப்பட்டவர்களை மீட்க தீயணைப்புத் துறையும் தயார் நிலையில் உள்ளன” என்று அவர் கூறினார்.
10 / 16
11 / 16
12 / 16
13 / 16
14 / 16
15 / 16
16 / 16
x