ஒத்தக்கடை அரசு ஆண்கள் பள்ளியில் 23 ஆண்டுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு


மதுரை ஒத்தக்கடை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 23 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த முன்னாள், மாணவர்கள், ஆசிரியர்கள்.

மதுரை: மதுரை ஒத்தக்கடை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு நடைபெற்றது.

ஒத்தக்கடையில் இருபாலர் பள்ளியாகச் செயல்பட்ட இப் பள்ளி, தற்போது ஆண்கள் மேல் நிலைப் பள்ளியாகச் செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் 1999–2001-ல் பிளஸ் 1, பிளஸ் 2 படித்த மாணவ மாணவிகள் மற்றும் அப்போது பணியாற்றிய ஆசிரியர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் குடும்பத்தினருடன் பங்கேற்று தங்கள் பள்ளிப் பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.